Sunday 14 August 2011

நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்

வெள்ளைப் பூண்டு:

பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள்.

இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது.

அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.

வெங்காயம்:


வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது.


நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள்காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.


காரட்:

நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.


ஆரஞ்சு :

வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காதபோது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.


பருப்பு வகைகள் :

பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

கோதுமை ரொட்டி :

நரம்பு மண்டலமும்மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும்நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


இறால் மீன் மற்றும் நண்டு :

அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.

தேநீர் :


தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள்
அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.


பாலாடைக்கட்டி :

சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.

முட்டைக்கோஸ் :

குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது.

உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன.

இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.
மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்துவிடும்..

source : http://www.tndawa.blogspot.com/

தமிழன் மானமுள்ளவன்

தமிழா வாழ்வு முடியும் நாளை
ஒருபோதும் எண்ணி விடாதே
வாழ்வு விடியும் நாளுக்காக
போராடு நிச்சியமாய் ஓர் நாள்
விடியும் ....

தன்னம்பிக்கை

"முடிந்தால் முயற்சி செய் !.
முடியாவிட்டால் பயிற்சி செய் !!.".
bye

முயற்சியே!

தேனிக்களின் முயற்சியே
பூக்களின் சிறுதுளி தேனும்
தேன் கூட்டை நிரப்புகிறது
சிற்பியின் முயற்சியே
செதுக்க செதுக்க
சிலை வடிக்கிறது
மனித முயற்சியே
நிலவில் முதன்முதலில்
கால் பதித்தது

வேம்பும் குளிர்சாதனமும்

வேப்பமரம் இயற்கை நமக்கு அளித்துள்ள குளிர்சாதனக் கருவியாகும். தோட்டத்திலுள்ள ஒரு வேப்பமரம், பத்து குளிர்சாதனக் கருவிகளுக்கு ஒப்பாகும். ஏனெனில், இது வெப்பநிலையை பத்து டிகிரி வரைக் குறைக்கவல்லது. மருந்துகள், பல வாசனைப் பொருட்கள், கிருமிநாசினிகள் ஆகியவற்றைத் தயாரிக்க வேப்பிலைகள் பயன்படுகின்றன. உலகில், இந்தியாவில்தான் இப்போது அதிக வேப்ப மரங்கள் உள்ளன. சமீபத்தில் நிகழ்ந்த ஒரு கருத்தரங்கில் ஓர் எச்சரிக்கை வெளியிடப்பட்டது. வேப்பமரத்தின் பயன்களை அறிந்த மற்ற நாடுகள், குறிப்பாக ஆஸ்திரேலியா, வியட்நாம் ஆகியவை இப்போது அதிக அளவில் வேப்பமரங்களைப் பயிரிடத் தொடங்கியுள்ளன. நாம் இருக்கும் வேப்பமரங்களையெல்லாம் வெட்டிக் கொண்டிருந்தால் இழப்பு நமக்குத்தான்!
 
தேசியச் செல்வம்
 
ஜம்முகாஷ்மீர் அரசாங்கத்திடம் பல மொழிகளில் கையினால் பொறிக்கப்பட்டுள்ள 16,000 நூல்கள் உள்ளன. இலக்கியம், புவியியல், சரித்திரம், மதம், தாந்திŽகம், வானசாஸ்திரம், மருத்துவம் முதலிய பல துறைகளிலும் இயற்றப்பட்ட இவை, அந்த அரசாங்கம் பெற்றுள்ள அரிய பொக்கிஷமாகும். கி.பி.ஐந்தாவது அல்லது ஆறாம் நூற்றாண்டில் இவை இயற்றப் பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மரத்தில் பொறிக்கப்பட்ட இந்தக் கையெழுத்துப் பிரதிகள் உலகிலேயே மிகப் பழமையானவை என்றும் கருதப்படுகின்றன. இவற்றை ஜம்மு அரசு தேசியச் செல்வமாக அறிவித்துள்ளன.
 

வேலூர் சிப்பாய்க் கலகம்

வேலூர் சிப்பாய்க் கலகம் என்பது, தமிழகத்தில் ஜூலை 10, 1806 ம் தேதி புகழ்பெற்ற வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த சிப்பாய்களின் கிளர்ச்சியாகும்.   இந்த கிளர்ச்சி தான் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதல் விதை.

1805ம் ஆண்டு, வேலூர் கோட்டையில் இருந்த மெட்ராஸ் ரெஜிமெண்டைச் சேர்ந்த தென்னிந்திய துருப்புகள் கலகத்தில் ஈடுபட்டனர். அந்த ஆண்டில், இந்தியப் படைகள் சமய அடையாளங்ளை வெளிப்படுத்தக்கூடாது, தலையில் குடுமி வைக்கக் கூடாது என்றும், ஐரோப்பிய ராணுவ உடைகளை மட்டும் தான் அணிய வேண்டும் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள் ஆணையிட்டனர்.

அதுமட்டுமின்றி, சிப்பாய்கள் ஐரோப்பிய முறைப்படி தொப்பி அணிந்து, அதில் மாட்டுத் தோலால் ஆன பட்டையை  வைக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் அங்கிருந்த 1500 இந்து, முஸ்லிம் துருப்புக்கள் கோபமடைந்து வெடித்தெழுந்தனர்.

அந்த கலகம் செய்தவர்களின் தலைவர்களுக்கு 600 பிரம்படி கிடைத்தது. இந்த நடவடிக்கை துருப்புக்களை இன்னும் கோபமூட்டியது. வேலூரில் சிறை வைக்கப்பட்டிருந்த திப்பு சுல்தானின் மகன்கள் துருப்புக்களைத் தூண்டி விட்டதாக பிரிட்டிஷ் ராணுவத் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. கலகத்தில் ஈடுபட்ட சிப்பாய்கள் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டனர்.

இதன் எதிரொலியாக, கடும் கோபத்திலிருந்த இந்திய சிப்பாய்கள் ஜூலை 10ம் தேதி 1806ம் ஆண்டு அதிகாலையில் உறங்கிக் கொண்டிருந்த ஆங்லேய அதிகாரிகள் பலரை படுக்கையிலேயே கொன்றனர். அங்கிருந்த 350 பிரிட்டிஷ் அதிகாரிகளில் 100 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் இந்த சம்பவம் இந்திய விடுதலைப் போராட்டமாக அங்கீகரிக்கப்படவில்லை. கலகத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான வீரர்களை அங்கு விரைந்த பிரிட்டிஷ் படைகள் கொன்று குவித்தனர். பல வீரர்கள் கைது செய்யப் பட்டனர். அவர்கள் பீரங்கிகளில் கயிற்றால் கட்டப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தக் கலகம் தான், 1857ம் ஆண்டு நடந்த மிகப் பெரும் கலகத்திற்க்கு முன்னோடியாக இருந்தது.

source : http://www.chandamama.com/

பூசணி பூதம்!


 பூசணி பூதம்!

தமிழ்நாட்டில் புதிதாகக் கட்டப்பட்ட வீட்டு வாசலில் ஒரு பூசணிக்காய் கட்டப் பட்டிருக்கும். அதன் மீது வண்ணங்களில் பூதத்தின் முகம் பயங்கரமாக வரையப் பட்டிருப்பதைக் காணலாம். இவ்வாறு செய்வதால் புதிய வீட்டிற்குப் பிறரின் கண்படாது என்று திருஷ்டி கழித்து இப்பூசணியை எடுத்துப் போட்டு உடைக் கிறார்கள். இம்மாதிரி பூசணிக்காய்களை புதிய தொழில்கள் ஆரம்பிக்கும்போதும், மோட்டார், பஸ், லாரி, மோட்டார் சைக்கிள், ஆட்டோ ரிக்ஷாக்கள் போன்ற வாகனங்களை வாங்கியதும் ‘திருஷ்டி’ கழிப்பதாகக் கருதி போட்டு உடைக்கும் பழக்கமும் பரவலாக உள்ளது.

 தெய்வமா அவன்!
மகாபாரதத்தில் கூறப்பட்டு உள்ள குரு வம்ச அரசகுமாரனான துரியோதனனைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பொறாமைக்காரன், கொடியவன், நயவஞ்சகன், ஏமாற்று பவன் என்றெல்லாம் தானே கூறுவீர்கள்! ஆனால் நீங்கள் நினைப்பதற்கு நேர்மாறாக யமுனைப் பள்ளத்தாக்கின் மேற்குப் பகுதியில் உத்திரகாசியில் வாழ் பவர்கள் அவனை தெய்வமாகக் கருதி வழிபட்டு வருகிறார்கள். இதை அறிந்ததும் நீங்கள் துரியோதனன் தெய்வமா என்று எண்ணித் திகைத்துத் தானே போகிறீர்கள்!

source : http://www.chandamama.com/

மைசூர் ராக்கெட்

தீபாவளி என்றாலே வாண வேடிக்கைகள் நம் நினைவிற்கு வரும்! சமீபகாலத்து வாணங்களில் சிறுவர்கள் மிகவும் விரும்புவது ராக்கெட்! சிறுவர்களின் விளையாட்டு ராக்கெட்டைத் தவிர, இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோ (ISRO), அமெரிக்காவின் நாசா (NASA) ஆகியவை ராக்கெட்டுகளின் துணைகொண்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துகின்றன என்பதைப் பற்றி நாம் அடிக்கடிக் கேள்விப் படுவதுண்டு.
 
ஆனால் போரில் ராக்கெட்டுகள் பயன்படுத்தப்படுவதைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதிலும் இந்தியாவில்தான் இவை முதலில் பயன்படுத்தப்பட்டன என்பது வியப்பாக இருக்கும். மைசூரைச் சேர்ந்த திப்பு சுல்தான் `மைசூர் ராக்கெட்' என்ற பெயரில் அவற்றை ஆங்கிலேயர்களுடன் நிகழ்த்திய போர்களில் பயன்படுத்தினார். மைசூர் ராக்கெட்டுகள் விண்ணில் 2.4 கி.மீ. உயரம் வரை பாயக்கூடியவையாக இருந்தன.
 
ஆங்கிலேயர்களுடைய ராக்கெட்டுகளோ அதிகபட்சம் ஒரு கி.மீ. உயரம் வரையே சென்றன. ஆனால் அவர்கள் திப்பு சுல்தான் தங்களுக்கு எதிராகப் பயன்படுத்திய ராக்கெட்டுகளை சேகரித்து, இங்கிலாந்திற்கு அனுப்பி வைத்து, அவற்றின் தொழில்நுட்பத்தை ஆராய்ந்து, தங்கள் ராக்கெட்டுகளையும் சக்தியுள்ளனவாக ஆக்கினர். அத்தகைய சக்திவாய்ந்த ராக்கெட்டுகளை, அவர்கள் மற்ற நாடுகளுடன் நிகழ்ந்த போர்களில் பயன்படுத்தினர்.
 

கலிங்க மகோற்சவம்


 கலிங்கம் என்ற பெயர் கேட்டதுமே, அசோக சக்கரவர்த்தி நிகழ்த்திய கலிங்கப் போர் நினைவிற்கு வரும். வெற்றி பெற்ற போதிலும், அதில் அசோகர் புத்தரின் கொள்கையான அன்பினால் மக்களின் இதயங்களைக் கவர்வதே சிறப்பானது என்று புரிந்து கொண்டு மனம் திருந்திய நிகழ்ச்சி நினைவிற்கு வரும்.

அந்த சரித்திர நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் இன்றும் ஒரிசா மாநிலத்தில் ஒவ்வோர் ஆண்டும் தௌலி எனும் இடத்தில் கலிங்க மகோற்சவம்  சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த மடாலயத்திற்கு அருகே, விஸ்வ சாந்தி ஸ்தூபம் ஒன்று 30 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது. இந்த ஸ்தூபத்திற்கும், அருகிலுள்ள ஒரு பெரிய புத்தர் சிலைக்கும் அருகேதான் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது.

இரண்டு நாள்களாகத் தொடர்ந்து கொண்டாடப்படும் இத்திருவிழாவில், நாடெங்கிலும் உள்ள போர்க்கலை நாட்டியக் கலைஞர்கள் பங்கு பெறுகின்றனர். கேரளத்திலிருந்து கலரிப்பயற்று மணிப்பூரைச் சேர்ந்த டாங் டா மற்றும் ஒரிசாவைச் சேர்ந்த சௌ, பாக்கிய நடனக் கலைஞர்கள் பங்கேற்பு குறிப்பிடத் தக்கவை.

இந்த ஆண்டு, இத்திருவிழா பிப்ரவரி நான்கு மற்றும் ஐந்தாம் தேதிகளில் நடைபெற உள்ளது. மாதத்தின் இறுதி மூன்று நாள்களில் புவனேஸ்வரில் ராஜாராணி திருவிழா விமரிசையாக நடைபெறும். 11ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ராஜாராணி கோயிலின் பரந்த புல்வெளியில் இத்திருவிழா நடைபெறுவதால், இதற்கு அப்பெயர் வந்தது. புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் இவ்விழாவில் பங்கு பெறுவதை கௌரவமாக நினைக்கின்றனர்.
இக்கலை நிகழ்ச்சிகளை ஒரிசா அரசின் சுற்றுலா துறை நடத்துகிறது. மேலும் பிப்ரவரி மாதத்தில் ராஜஸ்தானில் பாலைவன விழா, ஆந்திராவில் தக்கான் விழா, மத்திய பிரதேசத்தில் கஜுராஹோ கலைவிழா ஆகியவையும் நடைபெறுகின்றன.

source : http://www.chandamama.com/

மிகப் பழமையான அருங்காட்சியகம்

மும்பையிலுள்ள விக்டோரியாஆல்பர்ட் அருங்காட்சியகம் தொடங்கி 150 ஆண்டுகள் ஆகிறது. சமீபத்தில் யுனெஸ்கோ ஸ்தாபனத்தின் பரிசைப் பெற்றது இது! 1855ஆம் ஆண்டு, பாவு டாஜிலாட் என்பவரால் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகத்திற்கு, அப்போதைய இங்கிலாந்து அரசியான ராணி விக்டோரியாவின் பெயரும், இளவரசர் ஆல்பர்ட்டின் பெயரும் சேர்த்து சூட்டப்பட்டது. இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, இந்த அருங்காட்சியகத்தின் பொறுப்பை மும்பை நகராட்சிக் கழகம் மேற்கொண்டது. ஆனால் அதன்பிறகு இதனுடைய பராமரிப்பு குன்றியதால், ஐ‡கூஅஇஏ நிறுவனத்தின் சிபாரிசின் பேரில் அருங்காட்சியகத்தின் பராமரிப்பை சீராக்கவும், மேலும் விரிவு படுத்தவும் தீர்மானித்த மாநில அரசு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. ஜம்னாலால் பஜாஜ் ஸ்தாபனத்தின் ஒத்துழைப்புடன், அருங்காட்சியகம் மிகச் சிறப்பாக மாற்றப்பட்டது. சீர்த்திருத்தப் பணிகள் முடிவடையும் போது, அருங்காட்சியகத்தின் 150வது ஸ்தாபன ஆண்டு விழாவும் வந்தது. யுனெஸ்கோ ஸ்தாபனத்தின் சிறப்புப் பரிசைப் பெறவேண்டுமெனில், அது எந்த அளவிற்கு சிறப்பாக சீர்த்திருத்தப்பட்டு தற்போது இயங்குகிறது என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இப்போது, அதனுடைய பெயர் முதன் முதலாக அதை நிறுவிய பாவு டாஜிலாட் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது.

source : http://www.chandamama.com/

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு
 
காளை மாட்டுடன் போரிடுவது என்பது ஸ்பெயின் நாட்டு தேசிய விளையாட்டு! காளைமாட்டைத் துரத்திப் பிடிப்பது இந்தியாவிலும் பல இடங்களில் உண்டு. குறிப்பாகத் தமிழ்நாட்டில் இது ‘ஜல்லிக்கட்டு' என்ற பெயரில் பொங்கலின் போது கிராமங்களில் கொண்டாடப்படுகிறது.
 
காளை மாட்டின் கொம்புகளில் சிவப்புத் துணியினாலான பண முடிச்சு ஒன்றைக் கட்டி, அதை ஓடவிடுவார்கள். கிராமத்து இளைஞர்கள் அதைத் துரத்திப் பிடித்து, கொம்பிலுள்ள துணியை அவிழ்த்துப் பணத்தை எடுத்துக் கொள்வார்கள். பணத்தைப் பெறுவதை விட, காளையை அடக்குவது வீரத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
 
இந்திரப்பிரஸ்தின் இன்றைய நிலை
 
இந்திரப்பிரஸ்தம்' என்ற இடம் தான் பாண்டவர்கள் ஆண்ட மாளிகை! குருகேஷத்திரப் போர் முடிந்த பின், யுதிஷ்டிரரும் அவருடைய சகோதரர்களும் கிருஷ்ணரின் பேரப் பிள்ளையான அநிருத்தனிடம் ராஜ்ய பாரத்தை ஒப்படைத்து விட்டு, காட்டை நோக்கிச் சென்றனர். அநிருத்தனுக்குப் பிறகு அவனுடைய சந்ததியினர் ஆண்டனர். கடைசியாக ஆண்ட மன்னர் பெயர் கேஷமகா! அவர் அவருடைய மந்திரி விஸர்வாவினால் ஆட்சிப் பீடத்திலிருந்து நீக்கப்பட்டார். பிறகு மந்திரியின் வாரிசுகள் சுமார் 500 ஆண்டுகளுக்கு ஆண்டனர். இப்போது அந்த இடத்தில், ஹுமாயுனால் கட்டப்பட்ட புரானா கிலா உள்ளது.
 

பாதுகைகளின் ஊர்வலம்


ஒவ்வோர் ஆண்டும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்லக்கு யாத்திரைத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அத்திருவிழாவின் போது புணே நகரத்தில் ஐந்து முதல் பத்து லட்சம் பக்தர்கள் திரள்கின்றனர். பிறகு புணேயிலிருந்து இரண்டு பல்லக்குகளில் திருமாலின் பரம பக்தர்களான துக்காராம், தியானேஷ்வர் ஆகிய இரு மகான்கள் பயன்படுத்திய பாதுகைகளை வைத்து சுமந்து கொண்டு ஊர்வலமாக பண்டரிபுரம் செல்கின்றனர். புணேயில் இருந்து பண்டரிபுரம் வரை உள்ள 200 கி.மீ. தூரத்தையும் கால்களுக்கு செருப்பு அணியாமல் நடந்தே செல்கின்றனர். இந்த யாத்திரை சுமார் 20 நாள்கள் வரை நீடிக்கிறது.

கடந்த ஜூன் 30ஆம் தேதி, சுமார் ஆறு லட்சம் பக்தர்கள் டேஹூவில் இருந்து துக்காராமின் பாதுகைகளையும், ஆலண்டியில் இருந்து தியானேஷ்வரின் பாதுகைகளையும் புணேக்கு சுமந்து வந்தனர். பிறகு இரு அணியினரும் சேர்ந்து புணேயிலிருந்து விட்டலர் (திருமால்) கோயிலான பண்டரிபுரத்தை கால்நடையாக நடந்து ஜூலை 29ஆம் தேதி அடைந்தனர். அவ்வளவு தூரம் நடந்தும் பக்தர்கள் உடல் களைப்பு தெரியாமல் உற்சாகத்துடன் இருந்தனராம்.


source :  http://www.chandamama.com/

கண்ணாமூச்சி விளையாட்டு!


 கண்ணாமூச்சி விளையாட்டு!
நிலா பால் போலக் காயும்போது நீங்கள் உங்கள் நண்பர்களைக் கூட்டிக் கொண்டு கண்ணாமூச்சி விளையாட்டை விளையாட லாமே. இது வழக்கமாக ஒருவர் கண்ணை இன்னொருவர் பொத்தி மற்றவர்கள் ஓடி ஒளிந்து கொள்ள அவர்களைக் கண்டுபிடிக் கும் விளையாட்டைப் போல அல்ல.
இதில் சிறுவர்கள் இரு கட்சிகளாகப் பிரிக்கப் படுகிறார்கள். ஒரு கட்சி நிழல் பகுதியிலும் மற்ற கட்சி நிலா வெளிச்சத்திலும் இருக்கும். நிழல் பகுதியிலிருந்து யாராவது வெளியே வந்தாலே மற்ற கட்சி அவரைப் பிடிக்க முடியும். அதுபோலத் தான் நிலா வெளிச்சத்தில் உள்ளவர் களில் யாராவது வெளியே வந்தால் எதிர்க்கட்சி பிடிக்க முடியும். அவர்களைத் தம் பகுதிகளிலிருந்து வெளியே வரச் செய்ய ஆசைகள் காட்டப்படும். இதற்கு புள்ளிகளைக் கணக்கிட்டு வெற்றி தோல்வியை முடிவு செய்யலாம்.
 பாதாம் பருப்பு ஒரு நாணயம்!
குஜராத்தில் 17வது நூற்றாண்டில் கசக்கும் பாதாம் பருப்புகள் நாணயங் களாகப் பயன்படுத்தப்பட்டதாம். இவ்வித 60 பாதாம் பருப்புகளின் மதிப்பு ஒரு காசு!


Source : http://www.chandamama.com/

Sekolah Jenis Kebangsaan Tamil Ladang Glenealy, Parit

SJK(T) Ladang Glenealy, Parit telah ditubuhkan pada tahun 1951 bertempat
di Batu Kawan Berhad d/a Taiko Plantation Berhad. Keluasan tapaknya
adalah seluas 1.25  (3 ekar). 
Pada tanggal 15.09.1989 bersamaan hari jumaat, lebih kurang jam 12.30
tengahari, telah berlaku satu peristiwa yang mengejutkan iaitu sekolah SJ
(T) Ladang Glenealy telah terbakar. Kebakaran itu adalah  disebabkan api
yang bermula daripada bilik pusat sumber sekolah. Kebakaran ini telah
memusnahkan semua harta benda sekolah, akibatnya pihak sekolah
mengalami kerugian lebih kurang  RM 124,000. 
Setelah mengambil kira kepentingan pembelajaran, murid-murid  sekolah
telah menumpang beberapa buah rumah yang telah dikosongkan oleh
pekerja-pekerja ladang ini. Walaupun keadaan rumah-rumah tersebut
merbahaya dan tidak selamat tetapi segala aktiviti persekolahan telah
dijalankan seperti biasa.
 
Keadaan sekolah tumpang (rumah lama) adalah seperti berikut:
Bilik darjah terdiri daripada 4 buah rumah lama.
Kerusi meja dipinjam daripada beberapa buah sekolah di Daerah PerakTengah.
Pejabat sekolah terdiri daripada sebuah rumah lama.
Bilik guru terdiri daripada sebuah rumah lama.
Tiada tandas guru / murid.
Tiada padang permainan.
Seterusnya, melibatkan ini Persatuan Ibubapa dan Guru (PIBG) sekolah ini


telah membuat permohonan untuk mendapatkan bantuan kewangan
ataupun derma daripada beberapa pihak tertentu
 
Pihak-pihak tersebut adalah seperti berikut:-
 Dato Seri Lee Loy Seng, PSM, SPMP, JK Taiko Plantation Sdn. Bhd. Ipoh.
 Y.B En. Nasaruddin bin Hj. Alang Saidin, AMP Ahli Parlimen Kawasan
      Parit. Sumbangan beliau adalah sebanyak RM 10,000.00 untuk membina
      bangunan sekolah.
Kementerian Pendidikan Malaysia. sumbangannya:-
vSumbangan bantuan modal RM 20,000.00 untuk bangunan sekolah.\
vSumbangan bantuan modal RM 32,500.00 untuk kantin sekolah.
vPPD, Perak Tengah dan beberapa buah sekolah di Perak Tengah:-
Ø bantuan kerusi dan meja.
PIBG sekolah:-
vSumbangan tenaga dan kewangan sebanyak RM 2,350.00 untuk membina
kantin.
JKR Perak Tengah:-
v Sumbangan pagar dan tandas guru.
Akhirnya, setelah sebuah sekolah baru berjaya dibina, semua peralatan dan
sekolah lama telah dipindahkan ke sekolah baru pada 24-11-1994 dan
sekolah murid berpotensi pada 1-12-1994. Kantin sekolah telah dibina pada
01-10-1995.