தீபாவளி என்றாலே வாண வேடிக்கைகள் நம் நினைவிற்கு வரும்! சமீபகாலத்து வாணங்களில் சிறுவர்கள் மிகவும் விரும்புவது ராக்கெட்! சிறுவர்களின் விளையாட்டு ராக்கெட்டைத் தவிர, இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோ (ISRO), அமெரிக்காவின் நாசா (NASA) ஆகியவை ராக்கெட்டுகளின் துணைகொண்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துகின்றன என்பதைப் பற்றி நாம் அடிக்கடிக் கேள்விப் படுவதுண்டு.
ஆனால் போரில் ராக்கெட்டுகள் பயன்படுத்தப்படுவதைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதிலும் இந்தியாவில்தான் இவை முதலில் பயன்படுத்தப்பட்டன என்பது வியப்பாக இருக்கும். மைசூரைச் சேர்ந்த திப்பு சுல்தான் `மைசூர் ராக்கெட்' என்ற பெயரில் அவற்றை ஆங்கிலேயர்களுடன் நிகழ்த்திய போர்களில் பயன்படுத்தினார். மைசூர் ராக்கெட்டுகள் விண்ணில் 2.4 கி.மீ. உயரம் வரை பாயக்கூடியவையாக இருந்தன.
ஆங்கிலேயர்களுடைய ராக்கெட்டுகளோ அதிகபட்சம் ஒரு கி.மீ. உயரம் வரையே சென்றன. ஆனால் அவர்கள் திப்பு சுல்தான் தங்களுக்கு எதிராகப் பயன்படுத்திய ராக்கெட்டுகளை சேகரித்து, இங்கிலாந்திற்கு அனுப்பி வைத்து, அவற்றின் தொழில்நுட்பத்தை ஆராய்ந்து, தங்கள் ராக்கெட்டுகளையும் சக்தியுள்ளனவாக ஆக்கினர். அத்தகைய சக்திவாய்ந்த ராக்கெட்டுகளை, அவர்கள் மற்ற நாடுகளுடன் நிகழ்ந்த போர்களில் பயன்படுத்தினர்.
source : http://www.chandamama.com/
No comments:
Post a Comment